பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவரும் உள்ளடங்குகின்றனர்
22 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என PCR பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்று காலையில் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.